சிரிப்பின் அழகு

In search of the emotions that colour life and imprint the beauty of experience!

Sunday, April 19, 2020

Some random challenge

பெயர்- தாரிணி தேவி
குடும்பம் - துணை வாழும் நண்பன் 
பிறந்த இடம் - சொந்த ஊர் -சேலம் 
வாழ்வது - ஹூபிட்டொர்ப் 
பிடித்த ஊர் - சென்னை 
பிடித்த நாடு - :( இந்தியா 
செல்ல விரும்பும் நாடு -ஆஸ்திரேலியா 
திரும்பவும் செல்ல விரும்பும் நாடு - துருக்கி 
பிடித்த சர்வதேச எழுத்தாளர்- மாயா ஏஞ்சலோ, யுவால் நூஹ் ஹாரி, டோனி ஹாரிசன் 
பிடித்த நாவல் - The Scarlet Pimpernel 
பிடித்த திரைப்படம் - Too big a list..
இறுதியாகப் பார்த்த படம் - ஜீவி 
பிடித்த விளையாட்டு - Badminton, Scrabble
இலக்கியத்தில் பிடித்த ஊர்ப் பெயர் - 
பிடித்த காதல் ஜோடி - அம்மாவும் அப்பாவும் 
பிடித்த தமிழ் எழுத்தாளர்கள் - கல்கி, ஜெயகாந்தன்,  (பலர் நினைவில் இல்லை) 
உங்களை முதன் முதலில் எழுதத்தூண்டிய நாவல் - எதுவும் இல்லை.
நேரில் சந்திக்க விரும்பும் இலக்கியவாதிகள் -ம்ம்ம்ம் .
கட்டித்தழுவ விரும்பும் எழுத்தாளர் - யாரும் இல்லை 
படிக்க விரும்புபவை - Too big a list
பிடித்த இலக்கிய சஞ்சிகை: ஈஈ (அப்டினா)
பிடித்த பதிப்பகங்கள் - 
பிடித்த தொலைக்காட்சி அலைவரிசை - None.
பிடித்த உரை - 
Theodore Roosevelt -"Citizenship in the Republic", on Apr 23,  1910
Dr. B.R Ambedkar's last speech in the Constituent Assembly(Nov25, 1949)
 Dr. Martin Luther King's Most decisive speech on 5th December 1955, after the first day of bus boycott.
விரும்புவது - To write, to dance and to sing 
பிடித்த புரட்சியாளர்கள் - அம்பேத்கர், பெரியார், சே., மாயா ஏஞ்சலோ 
இலக்கியத்தில் சாதிக்க விரும்புவது - 

Wednesday, April 15, 2020

TNY and my ramblings

April14: Much celebrated Tamil New Year; my puzzling mind and need to know the relevance.

It has been a handful of years of being a non believer.

How to responding to wishes is an internal strife I try and resolve..
This time for a change, why not let my mind out?

So here is the gift to all my dear friends, who celebrated, had fun and took time kind enough to wish me..
Wishing you happiness, peace and safety in your festivities, <3 span="">
Have fun celebrating, But do take some time to read around, for knowledge is bliss not ignorance...


1) Tamil New year: Is a cyclic calendar of 60 years, the 61st then takes the first name and goes on again on for another 59.
This being, How is history or archaeology represented in this convention ?

2) Then comes the mythical story on whose names are these 60.
Leaving it to your research and googling.
Seriously, with all respect to LGBTQ this isn't ingest-able.
[No science, no logic, 60 children born on a single day, for a couple of men, Puff...:(]

3) Tamil New Years derivation from Panchangam and its relevance in astrology: No clarity for the need to celebrate in a common woman terms

4) Related more to Sanskrit and its scriptures does makes no sense for it being called Tamil New year.

That said and rambled, I have one celebration that I wish for you today and every, Life.. :-)
Enjoy and Celebrate life!
Much love <3 div="">


Some readings of interest:

https://www.thenewsminute.com/article/tamil-new-year-really-tamil-politics-thai-vs-chitirai-karunanidhi-s-electric-speech-60339



Monday, July 2, 2018

நெதர்லாந்து போக்குவரத்துக்கு ஸ்ட்ரைக்

நெதர்லாந்து போக்குவரத்துக்கு ஸ்ட்ரைக்!

சென்ற புதனிலிருந்து, ஐந்து நாட்களாக உள்ளுர் பேருந்துகள் ஓடவில்லை. ஊதிய உயர்வை கோரியும், பணிசுமைகளை குறைக்க கோரியும் தொழிற்சங்கங்கள்  வேலை நிறுத்தம் செய்து வந்தன. ஆம்ஸ்டர்டம் நகருக்குள் செல்லும் பேருந்துகள் வேலை நிறுத்தம் செய்யாமலிருந்தும், மற்ற சிறு ஊர்களிலிருந்து போக்குவரத்து நின்றுபோயிருந்தது.
3.5% ஊதிய உயர்வை 3 வருடங்களுக்குள் தர  கோரியும், ஷிபிட் முறைக்காக செய்யப்படும் ரோஸ்டர் பிளானில் பங்குபெற  விரும்பியும், தீவிரமாக வேலை நிறுத்தம் செய்தனர்.
இன்று தொழிற்சங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ள பட்டு, ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதுவும் போராட்டம் தானே!

Monday, May 21, 2018

நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள

மல்லுவுட்டிலிருந்து பார்த்த அடுத்த படம் - 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள'
[கீதாவும் ரீனாவும் சிரித்து சிரித்து பார்த்த படமென்று ஹரி சொல்லி பார்த்தது.]

ஷீலா சாக்கோ, ஒரு கல்லூரி பேராசிரியை, இவரின் ஒரு காலை நடைபெயர்ச்சியுடன் துவங்குகிறது கதை. புற்றுநோயின் அறிகுறி தனக்கு இருப்பதாக சந்தேகிக்கும் ஷீலா அதன் பின்னே என்ன செய்கிறார், நோய் அறிந்து அவர் குடும்பத்தினர்க்கும் அவருக்கும், நடக்கும் அத்தியாயங்களே இப்படம்.

புற்றுநோய் என்றாலே, சோகம் கவலை என்று மட்டும் பார்த்த நமக்கு, 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள 360'ல் புதிய கோணம். 'பய'மயமான கணவன், பொழுதும் தீனி நொறுக்கும் வெளிநாட்டு ரிட்டர்ன் மகன், மாடர்ன் மகள்கள், கருமி மருமகன், நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் மாமனார், இவர்கள் நடுவில், ஷீலா எப்படி புற்றையும் அதன் மருத்துவத்தையும் எதிர்கொள்கிறார் என்பதே படம்.

நகைச்சுவைக்கு சிறிதும் குறைவில்லாமல், காதல், பிரேக்கப், நட்பு, செண்டிமெண்ட் சுற்றம், என அன்பும் அக்கறையும் நிறைந்து யதார்த்தற்கு நெருக்கமான கதை. மிகைப்படுத்துதல் இல்லாமல், ஒரு குடும்பத்தின் இயல்பையும், அதன் நெருக்கடியனான பொழுதில் ஏற்படும் நிலையை திரையில் காண்பித்திருக்கிறார்கள்.
கான்சர் என்றால் அழுது வடிந்து, சோகத்தை மட்டும் கொள்ளாமல், குடும்பத்தினருக்கு நடக்கும், குடும்பத்தினருக்குள் நடக்கும் , காட்சிகளை கான்செர், கீமோ என்ற அத்தியாயங்களுடன் பிணைத்திருக்கிறார்கள்.

ஷீலாவாக, பன்னீர் புஷ்பங்கள் ஷாந்தி கிருஷ்ணா; Warrior mom ஆக கலக்கிவிட்டிருக்கிறார். சாக்கோவாக லால், பயந்து, கலங்கி, அப்பாவாக நிறைந்திருக்கிறார். நிவின், funny guy as usual!

நிவின் தயாரித்திருக்கிறார். But why என்ற கேள்வி வந்துகொண்டே இருந்தாலும், அன்பு நிறைந்த ஒரு எதார்த்த திரைப்படம், அது போதுமே காரணம்...
'நண்டுகள் நாட்டில் மாட்டி, பிடித்து இழுக்கப்பட்டாலும் எதிர்த்து வென்று நிற்கும் போர்வீரர்கள், கேன்சர்ஐ வென்றவர்கள், என்று சொல்லி இருக்கிறார்கள் ..
இப்படியான படங்கள் மல்லுவுட்டில் மட்டும் சாத்தியம்! 

Feel good movie! 

Monday, December 11, 2017

பனியும் பொழிவும்

மென்மையாகவே பொழிகிறது இவ்வெள்ளை பனி.
சுட்டு எரிக்கும் வெயில் போலில்லாமல்,
சடசடவென அடித்து பெய்யும் மழை போலும் இல்லாமல்
தன்மையாக, மென்மையாக பொழிகிறது இப்பனி.

அன்றி,
கூர்கொண்டு எரிக்கும் வெயிலின் பின்னேயும்,
நனைத்து வழியும் மழையின் பின்னேயும்,
பசுமை பூக்க எழுந்து நிற்கும் மரங்களும் கிளைகளும்-
பனியால் வெண்மை போர்த்தி
கறுத்து நிற்கின்றன -திக்கி திகைத்த
புது கைம்பெண் போல! :(


Wednesday, August 30, 2017

DummiesforUrIntrospectionHindus #1

ஒரு மன்னிப்பும் கொஞ்சம் கேள்விகளும் ....
"இந்து சேரியை கொளுத்துவான்
இந்துத்துவா மசூதியை இடிக்கும்"

பல்வேறு மீம்கள் உலா வரும் இணைய உலகில், இப்படி ஒரு மீம் பகிர்ந்ததற்கு சில வருத்தங்கள் ஏற்பட்டு விட்டது.
அவ்வருத்தத்திற்கு மன்னிப்பும், அதனுடனே சில கேள்விகளை வைத்துள்ளேன். பதில் இல்லையெனினும் கேள்விகள் உங்களுக்காகவே...

இந்து எனப்படுபவன் யார்?
அவமானப்படும்படியான செய்தியான சேரியை எரிக்கும் செயல் எப்படி, எதற்க்காக இந்து என்பவனுடைய தலையில் ஏறியது ?
சரி, சேரியை சேர்ந்தவர்கள் எம்மதத்தை சேர்ந்தவராக இருக்கிறார்கள், பெரும்பான்மையாக?

ஒரே மதத்தினவர்களாக இருந்தும் கோவிலில் நுழைய தடை இருந்ததும், 1924ல் பெரியார் வைக்கத்தில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தியதை தெரியுமல்லவா?
இதோ 2017 ஆண்டு, பெரிய கோவில்களில் இப்பிரச்சனை இல்லாவிடுனும், இன்றும் இந்து நம்பிக்கை உள்ளவர்கள் சில ஆலயங்களுக்குள் நுழைய ஏற்படும்  பிரச்சனைகளை செய்திகளாக கண்டிருக்கீர்களா?

ஒரே மதத்திற்குள் இருந்தும் அனைவர்க்கும் சமநிலை இருக்கிறதா ?
எதனால் படிநிலைகள் இருக்கிறது?
படிநிலையில், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ?
எதனால் நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்?
அதனால் தங்களுக்கு என்ன வசதி?

மேல் படியில் உள்ள பிரிவினரை தாங்கள் காணும் போக்கு என்னது?
கீழ் படியில் உள்ளவர்களுடனான தங்கள் உறவு எப்படியாக உள்ளது?
இதற்கு மூல காரணம் என்ன?

ஹிந்து எரிப்பான் என்று சொன்னவுடன் வரும் கோபம், தாக்கப்பட்டவன் எம்மத நம்பிக்கை உடையவன்(எம்மதமாயினும் தாக்கப்படுவது மனித உரிமை மீறிய செயல் ), அவன் எதற்கு தாக்கப்படுகிறான் என்பதை (பாவம் புண்ணியம் தாண்டி) நீங்கள் யோசித்திருக்கிறீர்களா?

இக்கேள்விகளை அறிவுபூர்வமாக, உணர்வுபூர்வமாக இதுவரை அணுகவில்லையெனில், ஏன் ?

ஒரு இந்து இன்னொரு இந்துவால் தாக்கப்படுவது, அதுவும் தான் நம்பும் இந்து கடவுளை தன் சேரியை சுற்றி வர ஆசைப்பட்டதிற்கு எனில்  இந்துவாக தங்கள் சமாதானம்/பதில்  என்ன?

ஒரே மதம் அதில் இருக்கும் அனைவரையும் இந்து என்று சேர்க்காமல் , பிரிந்து பிளந்து கிடப்பது எதனால் ?

இக்கட்டான பொழுதுகளில் (ஹிந்துக்களில்) காணப்படும் inert நிலையினை கண்ட கோபமே அந்த மீம்..
இப்பொழுது சொல்லுங்க எனக்கான சமாதானம்?






Saturday, August 5, 2017

எனக்கே எனக்காக..


சிட்டு குட்டியின் துறுதுறு விளையாட்டு இல்லா வீட்டில்  
சாவி கொண்டு, தானே உள் நுழைகிறேன்.
அவன் இனிய ரீங்காரம் கேட்காமலும், 
அவன் தாயின் அன்பு குரல் இல்லாமலும்,
அவன் தந்தையின் நேர்த்தியான செயலற்ற வீட்டில் 
பெருத்த அமைதி வரவேற்கிறது!

புதிய தேசத்தின் மௌனம் கனமாக நிரம்பி வழிய 
தேடி வந்த நாட்டின் குளிர், அறையினுள் பரவுகிறது.
நினைவுகளை மெல்ல அசைபோடுகிறேன்..
உறவுகளும் நட்புகளும் வெகு தொலைவில் இருக்க 
நான் இங்கு தனியே..

வாழாத வாழ்க்கை என்று எதுவும் இல்லாதபொழுதும் 
காணாத அனுபவத்தை தேடி 
புதிய வாசத்தை நுகர,
இங்கு நான் :)

இதோ எனக்கான 'என்' நாட்கள் தொடங்கிற்று...

அடிபுல் ருசிக்க,
ஆனந்த குரலிசைக்க,
களித்து வாழ ,
நுரையீரல் முழுதும் காற்று நிரப்ப  
வேறு உலகம் அறிய- என 
எத்தனை எத்தனை குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன் :D 

நிலையானதும்,
சரியென்றும் தவறென்று 
எதுவும் எப்பொழுதும் கிடையாதே!
வாழ்ந்து தான் பார்க்கிறேன்
எனக்கே எனக்கான நாட்களை...